3 கிலோ கேன்சர் கட்டி.. பக்குவமாக அகற்றி சாதனை படைத்த அரசு மருத்துவர்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கலியமூர்த்தி. கடந்த சில ஆண்டுகளாக தொடை பகுதியில் ஏற்பட்ட வலியால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் கலியமூர்த்தி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தபோது, அவரை பரிசோதித்த அறுவை சிகிச்சை நிபுணர் ரஞ்சித், கலியமூர்த்தியை சிடி ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

அதன்படி, அந்த அறிக்கையை ஆய்வு செய்த டாக்டர் ரஞ்சித் கலியமூர்த்தி, கலியமூர்த்திக்கு புற்றுநோய் இருப்பதை உறுதிசெய்து, அதன் பிறகு கலியமூர்த்திக்கு அறுவை சிகிச்சை செய்ய கலியமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றார். இதையடுத்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட கலியமூர்த்திக்கு இன்று அறுவை சிகிச்சை நிபுணர் ரஞ்சித் தலைமையிலான மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து கலியமூர்த்தியின் வலது தொடை பகுதியில் இருந்த சுமார் 3 கிலோ 700 கிராம் எடையுள்ள புற்றுநோய் கட்டியை அகற்றினர்.

இதன் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 27 புற்றுநோய் கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர் ரஞ்சித் அகற்றியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏராளமான புற்றுநோய் கட்டிகளை கண்டறிந்து அகற்றி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
