திருவள்ளூர் அருகே கோர விபத்து: லாரி மீது ஆட்டோ மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

 
ஆட்டோ

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே லாரி மீது ஆட்டோ மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குடும்பத்தினருடன் கோயிலுக்குச் செல்வதற்காக ஆட்டோவை ஓட்டிச் சென்ற லோகநாதன், எதிர்பாராதவிதமாக வாகனத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக முன்னால் சென்ற லாரி மீது ஆட்டோ மோதியுள்ளது.

இந்த எதிர்பாராத விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த மற்ற 3 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.