சோகம்!! செங்கல்பட்டு பாலாற்றில் குளிக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!

 
3 பேர் உயிரிழப்பு

சென்னை செங்குன்றத்தை பகுதியைச் சேர்ந்த சதீஷ் அவரது சகோதரர் குமரேசன் மற்றும் அவர்களது நண்பர் சீனுவாசன் ஆகியோர் குடும்பத்தோடு  நேற்று மேல்மலையனூர் அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு வழிபாடு முடித்துகொண்டு  காலை வீடு திரும்பியுள்ளனர். அப்போது செங்கல்பட்டு வரும்போது சதீஷ் என்பவரது மகள் வேதஶ்ரீ  மற்றும் குமரேசன் மகள் சிவசங்கரி  ஆகியோர் மாமண்டூர் பாலாற்றில் குளிப்பதற்கு கேட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்களி குழந்தைகளை ஆற்றில் குளிக்க வைத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  சிறுமிகள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்இதனை கண்ட சீனுவாசன்  சிறுமிகளை அவர்களை காப்பாற்ற ஆற்றில் இறங்கியுள்ளார்அப்போது எதிர்பாராத விதமாக மூவருமே நீரில் மூழ்கி இறந்துள்ளனர்

பின்னர் இது குறித்து தகவல் அறந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் வேதஶ்ரீ சடலத்தை மட்டும்  மீட்ட நிலையில்  மேலும் இருவரின் உடல்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web