வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திய தமிழர்கள் கைது.. வெளிவந்த பகீர் பின்னணி!
டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தியதாக 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் கைது செய்யப்பட்ட 3 தமிழர்களிடம் இருந்து 75 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு தேங்காய் தூள் என்ற பெயரில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது.
சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று தமிழர்கள் என்சிபி மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில், மேற்கு டெல்லியில் உள்ள பாசாய் தாராபூர் பகுதியில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 3 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஹெல்த் மிக்ஸ் பவுடர், டெசிகேட்டட் தேங்காய் போன்ற உணவுப் பொருட்கள் என்ற பெயரில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா என பல நாடுகளுக்கு விமானம் மற்றும் கடல் சரக்குகள் மூலம் போதைப் பொருட்களை கடத்தியுள்ளனர். இந்த கும்பல் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடிக்கு போதைப்பொருள் கடத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!