அதிர்ச்சி... 60 பெட்டிகளில் தங்க நகைகள்... ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ நகைகளையும் பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள்!
இந்தியா ஏழை நாடுன்னு யார் சொன்னா? என்று கேள்விக் கேட்க தோன்றுகிறது. ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 69பெட்டிகளில் கூரியர் சர்வீஸ் மூலமாக தங்க நகைகள் முறையான ஆவணங்கள் இல்லாமல் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகளை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஓசூர் அருகே மாநில எல்லையோர பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில், தமிழக எல்லையான ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த கூரியர் சர்வீஸ் வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்க நகைகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் வாகனத்தை ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று அங்கிருந்த பொருட்களை எடுத்து சோதனை நடத்தினர். மேலும் கூரியர் சர்வீஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பொருட்களின் பில்களை சரிபார்த்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இந்த கூரியர் சேவை நிறுவனங்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தங்க நகைகளை பெற்று, ஓசூரில் உள்ள பிரபல நகைக்கடைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. கூரியர் சர்வீஸ் வாகனத்தில் 69 பெட்டிகள் தங்க நகைகள் இருந்த நிலையில், 45 பெட்டிகள் தங்க நகைகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டது.

மீதமுள்ள 24 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து 69 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இதன் மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் என்றும், தங்க நகைகளின் மொத்த எடை 30 கிலோ என்றும் கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு ஓசூர் துணை கருவூல அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!
