300 யூனிட் இலவச மின்சாரம்!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!
மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் அங்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், 300 யூனிட் இலவச மின்சாரம், இலவச மருத்துவம் மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3000 உட்பட பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
நடப்பு ஆண்டில் . இதனை முன்னிட்டு, ஆட்சியைப் பிடிப்பதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் சத்னா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் பல வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். அதில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானை கடுமையாக சாடியுள்ளார். அத்துடன் தனது மருமகன்கள் மற்றும் மருமகள்களையே மோசடி செய்த மாமா மீது நம்பிக்கை வைப்பதனை மக்கள் நிறுத்த வேண்டும் என கேட்டு கொண்டார். .
சவுகானை மக்கள் மாமா என குறிப்பிடுவது வழக்கம். கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர், ’’மத்திய பிரதேசத்தில் 300 யூனிட் இலவச மின்சாரம், இலவச மருத்துவ சிகிச்சை, தரம் வாய்ந்த பள்ளிக்கூடங்கள் கட்டப்படும். அத்துடன் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3000 வழங்கப்படும்’’ என்பது உட்பட பல வாக்குறுதிகளை கெஜ்ரிவால் அளித்தார். ஏற்கனவே டெல்லி மற்றும் பஞ்சாப்பில் இதுபோன்ற பல வாக்குறுதிகளை வழங்கி ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தது போல் தொடர்ந்து வாக்குறுதிகளை நிறைவேற்றியும் வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க