329 பேர் கைது!! பரபரக்கும் கள்ளக்குறிச்சி!!! போலீசார் குவிப்பு!!

 
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பள்ளி முழுமையாக சூறையாடப்பட்டது. இந்நிலையில், பள்ளி வாகனங்கள் அனைத்தும்  தீ வைத்து கொளுத்தப்பட்டன.

கள்ளக்குறிச்சி

 இந்த போராட்டத்தின் போது, கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.  இதில் 55 போலீசார் காயமடைந்தனர். அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. இதனையடுத்து வஜ்ரா வாகனங்களுடன் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் கலவரத்தில் ஈடுபட்டு சேதம் விளைவித்தவர்கள் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் இன்று காலை வரை 329 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி

இவர்கள் அனைவரும் கலவரத்தில் ஈடுபட்டவர்களாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது 10க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்முறையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web