10வகுப்பு படித்தவர்களுக்கு 3359 பணியிடங்கள்!! உடனே அப்ளை பண்ணுங்க!!

 
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம்

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், சுமார் 3,359 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பமும், தகுதியும்  இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் சிறை காவலர்கள், தீயணைப்பாளர் பதவிகளுக்கு விரைவில் தேர்வுகள் நடைபெறும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம்


தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, சிறப்பு தேர்வு 
எழுத்து தேர்வு -70 மதிப்பெண்கள்
உடல் தகுதித் தேர்வு -24 மதிப்பெண்கள்
சிறப்பு தேர்வு -6 மதிப்பெண்கள் 
விண்ணப்பத்தேர்வு கட்டணம் : ரூ250
 கல்வித்தகுதி :10ம் வகுப்பு தேர்ச்சி இதற்கு மேல் தகுதி பெற்றவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ள முடியாது என்பது  குறிப்பிடத்தக்கது.

வேலை வாய்ப்பு
வயது வரம்பு :18 முதல் 25 வயது வரை 
குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.  
அதன்படி 
பிசி, எம்.பி.சி, பி சி முஸ்லிம்கள் மற்றும் டிஎன்சி - 28 வயது வரை  
எஸ்சி, எஸ்டி -  31 வயதுவரை  
திருநங்கைகள்-  31 வயது வரை  
ஆதரவற்ற விதவைப் பெண்கள்-  37 வயது வரை வயதில்  தளர்வு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது
விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப கட்டணங்களையும் ஆன்லைன் மூலம் செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web