தமிழக காவல்துறையில் 4 கூடுதல் எஸ்.பி.க்களுக்கு எஸ்.பி.க்களாக பதவி உயர்வு !!
அரசின் முதன்மைச்செயலாளர் அமுதா அவர்கள் காவல்துறையில் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் இதில் நான்கு பேருக்கு பதவி உயர்வும் பணியிட மாற்றமும் வழங்கப்பட்டுள்ளது.திருச்சி மாநகர காவல் துணை ஆணையராக (தலைமையிடம்) திரு.S.ரவிச்சந்திரன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார், இவர் இதற்கு முன்பு திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் பட்டாலியன் 1ல் கூடுதல் துணை கண்காணிப்பாளராக பணியில் இருந்தார்.
தற்பொழுது காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் துணை ஆணையராக (தலைமையிடம்) நியமிக்கப்பட்டுள்ளார். திரு எச். ரமேஷ் பாபு கூடுதல் கண்காணிப்பாளர் , போலீஸ் ஆட்சேர்ப்பு பள்ளி, விழுப்புரத்தில் இருந்து பதவி உயர்வு பெற்று காவல் துணை ஆணையராக உச்சநீதிமன்ற பாதுகாப்பு பணிக்கு சென்னியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திரு.வி.மலைச்சாமி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் அரியலூரில் இருந்து கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டு, காவல் கண்காணிப்பாளராக, அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு, சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திரு ஏ.சி.செல்லப்பாண்டியன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், சைபர் கிரைம் பிரிவு, சேலம் நகரில் இருந்து காவல் கண்காணிப்பாளர் மற்றும் கமாண்டன்ட், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை V பட்டாலியன், ஆவடியில் உள்ள காலிப் பணியிடத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?