அடுத்தடுத்து 4 கொலைகள்.. சொந்த குடும்பத்தினரை கொன்று புதைத்த 15 வயது சிறுவன்!

 
திரிபுரா

தனது சொந்த குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை 15 வயது சிறுவன் ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்த சம்பவம் திரிபுராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாவட்டம் தலாய் மாவட்ட போலீசாருக்கு துரை ஷிப் பாரி கிராமத்தில் ஒரு வீட்டு வாசலின் அருகே உள்ள குழியில் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த உடலை கைப்பற்றி பிரேதர பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான கமல்பூர் காவல் அதிகாரி ரமேஷ் யாதவ் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டார்.

கொலை
அதில் ஒரு குறிப்பிட்ட வீட்டிற்கு அருகே இருந்த அந்த குழியில் சடலம் கண்டெடுக்கப்பட்டதன் பிறகு சந்தேகத்தின் அடிப்படையில் அந்த குழியை மீண்டும் தோண்டினோம். அப்போது அதில் 3 உடல்கள் புதைக்கப்பட்டு இருந்தது. ஆகவே கிடைத்த மொத்த சடலங்கள் 4ல் 3 பேர் பெண்கள். ஒருவர் ஆண். 

இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. மேலும் அதே குடும்பத்தில் உள்ள 15 வயது சிறுவன் தான் இந்த படுகொலைகளைச் செய்துள்ளான் என்பதும் தெரிய வந்தது. ஆகவே அந்த சிறுவனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

உயிரிழந்தவர்கள் பாதல் தேப்நாத் (வயது 70), சுமிதா தேப்நாத் (வயது 32), சுபர்னா தேப்நாத் (வயது 10) மற்றும் ரேகா தேப் (வயது 42) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சிறுவன் எதற்காக சொந்த குடும்ப உறுப்பினர்களையே கொலை செய்தான் என்ற காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web