பிரியாணி சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சி வீடியோ... !!

 
hospital

சென்னை கொடுங்கையூர் பகுதியில் சென்னை பிலால் தலப்பாக்கட்டி பிரியாணி ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சர்மா நகரைச் சேர்ந்த ராம்ஜி (30) என்பவர் தனது மனைவி ஜீவிதா மற்றும் அக்கா மகள் ஜாக்லினுடன் உணவகத்திற்குச் சென்று பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.

அதேபோல் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (30) என்பவர் தனது மனைவி ஷகிலா பானுக்காக பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் பார்சல் வாங்கி சென்று வீட்டில் சாப்பிட்டுள்ளார். பின்னர் உணவை உட்கொண்ட ராம்ஜி, அவரது மனைவி ஜீவிதா, அக்கா மகள் ஜாக்லின், ரஞ்சித் மனைவி ஷகிலா பானு ஆகிய 4 பேருக்கும் சில மணி நேரத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது‌.

உடனே அனைவரும் கொடுங்கையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இன்று அனைவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்ட போது அவர்கள் மெத்தனமாக பதில் அளித்ததுடன் மிரட்டும் தோனியில் பேசியதாக கூறப்படுகிறது.

தலப்பாகட்டி

இதனால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் ஹோட்டலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில் பேரில் கொடுங்கையூர் போலீசார் ஓட்டல் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web