அதிர்ச்சி வீடியோ!! மொஹரம் ஊர்வலத்தில் 4பேர் மின்சாரம் தாக்கி பலி!!
ஜூலை 29ம் தேதி சனிக்கிழமை உலகம் முழுவதும் மொஹரம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இஸ்லாமிய மதத்தில் 12 மாதங்களில் முதல் மாதம் மொஹரம். இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் யாரும் போர், சண்டை, சச்சரவில் ஈடுபடக்கூடாது . தங்கள் மீது போர் தொடுக்கப்பட்டால் அதை எதிர்த்து போரிடலாம். ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் கெட்கோ கிராமத்தில் இஸ்லாம் மக்கள் பெருமளவில் திரண்டு பேரணிக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். இந்த பேரணியை தலைமையேற்று நடத்தும் குழுவினர் இரும்பினால் ஆன கொடி கம்பத்தை தாங்கி பிடித்து நடந்துக் கொண்டிருந்தனர்.
‘Tazia’ comes in contact with high-voltage tension wire during Muharram procession in Jharkhand's Bokaro, resulting in a blast.
— Vani Mehrotra (@vani_mehrotra) July 29, 2023
4 people were electrocuted, while 13 others have been injured in the incident.#Muharram #Jharkhand pic.twitter.com/9t42q2DJFT
அப்போது எதிர்பாராத விதமாக அந்த கம்பம், மின் கம்பியில் உரசியதால் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொகாரோ காவல்துறை கண்காணிப்பாளர் “சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பேரணி நடத்த எங்களிடம் அனுமதி கேட்டிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்த பின்னர்தான் அனுமதி கொடுக்கப்பட்டது. அதே போல் திட்டமிட்டபடி 6 மணிக்கு பேரணி தொடங்கியது. இந்நிலையில் கொடி கட்டிய இரும்பு கம்பம் 11000 வோல்ட் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது. இதற்கு கீழே இருந்த மக்கள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இந்த கோர சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு பொகாரோ பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 3 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால் பலிஎண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலத்தின் மற்ற இடங்களில் இரும்பு கம்பிகளில் கொடியேற்றி ஊர்வலமாக எடுத்துச்செல்ல காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். மொஹரம் கொண்டாட்டத்தின் போது மின்சாரம் தாக்கி 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?