புழல் சிறையில் இருந்து 40 கைதிகள் விடுதலை!! தமிழக அரசு அதிரடி!!
இந்தியாவில் சுதந்திர தினம், தலைவர்களின் பிறந்த தினத்திற்கு நல்லெண்ண அடிப்படையில் சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள், 75வது ஆண்டு சுதந்திர தினம் காரணமாக புழல் சிறையில் நீண்டகாலமாக இருந்த 40 கைதிகளை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் செப்டம்பர் 15ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும், கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்யப்படுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதேபோல், 75வது சுதந்திர தினத்தையொட்டி, நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விதிமுறைக்குட்பட்டு விடுதலை செய்யலாம் என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து தற்போது 40 கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!