41 ரயில்கள் காலதாமதம்... பனிமூட்டம் காரணமாக பயணிகள் கடும் அவதி!
இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்தும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டெல்லியின் பல இடங்களிலும் அதிகாலை முதல் பனிமூட்டம் சூழ்ந்து தெளிவற்ற வானிலை காணப்படுகிறது. இதனால், வாகன போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது. ரயில்களின் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

டெல்லிக்கு, பல்வேறு நகரங்களில் இருந்து வந்து சேர வேண்டிய 41 ரயில்கள் இன்று காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன. இது குறித்து இந்திய ரயில்வே நிர்வாகம் ” புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், மகாபோதி எக்ஸ்பிரஸ், லிச்வி எக்ஸ்பிரஸ், தட்சிண எக்ஸ்பிரஸ், மால்வா எக்ஸ்பிரஸ், சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ்” ஆகியன 3 மணிநேர காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன. பூர்வா எக்ஸ்பிரஸ், வைஷாலி எக்ஸ்பிரஸ், பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ், சிரஞ்சீவி எக்ஸ்பிரஸ், காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ், பத்மாவதி எக்ஸ்பிரஸ், ஜி.டி. எக்ஸ்பிரஸ் ஆகியன 2 மணிநேர காலதாமதத்துடன் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால், ரயில் பயணிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில நாட்களாகவே டெல்லியில் கடும் பனிமூட்டம் மற்றும் தெளிவற்ற வானிலை காரணமாக ரயில்களின் வருகையில் காலதாமதம் ஏற்பட்டு பயணிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
