அதிர்ச்சி!! 4ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

 
பிரதிக்ஷா

திருவள்ளூர் பெரியகுப்பத்தில் கிருஷ்ணமூர்த்தி- கற்பகம் தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும்,  9 வயதில் பிரதிக்ஷா என்ற மகளும் உள்ளனர். பிரதிக்ஷா தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். 9 வயதே ஆனாலும் சிறுமி பிரதிக்ஷா, சினிமா  பாடல்களுக்கு வாயசைத்து நடனமாடி இன்ஸ்டாகிராமில் 50க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவனம் செலுத்தி வந்துள்ளார். மகளின் செயலை முதலில் ரசித்த பெற்றோர், ஒரு கட்டத்தில் அவர் செல்போனில் மூழ்கி அடிமையாவதை பார்த்து கொதித்துபோயினர்.

பிரதிக்ஷா

இந்த நிலையில் நேற்று இரவு சிறுமி பிரதிக்ஷா தனது பாட்டி வீட்டின் எதிரில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த பெற்றோர், இரவு நேரமாகிவிட்டதால் வீட்டுக்கு சென்று படிக்குமாறு கூறிவிட்டு, வீட்டின் சாவியை சிறுமி பிரதிக்ஷாவிடம் கொடுத்துவிட்டு பைக்கில் வெளியே சென்றனர்.

சிறிது நேரத்துக்கு பின் கிருஷ்ணமூர்த்தி- கற்பகம் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. இதனால் அவர்கள் பலமுறை சிறுமி பிரதிக்ஷாவின் பெயரை அழைத்தும், கதவை தட்டியும் திறக்கவில்லை. பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தந்தை கிருஷ்ணமூர்த்தி ஜன்னல் கதவை உடைத்து பார்த்தபோது, சிறுமி ஜன்னல் கம்பியில் கட்டி தூக்கிட்டு கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிறுமியை மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

பிரதிக்ஷா

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் நகர காவல் துறையினர் சிறுமி உயிரிழப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web