வீதியில் நிற்கும் 5 குழந்தைகள்.. கள்ளக்காதல் ஜோடியின் விபரீத செயலால் சோகம் !

 
அமரஜோதி

தேனி மாவட்டம் அரண்மனைப் புதூர் அருகே உள்ள அய்யனார்புரம் கிராமத்தில் மகுடேஸ்வரன் (45) என்பவர் வசித்து வந்தார். விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 3பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில்‌ மகுடேஸ்வரனின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.

இதனால் தனியாக வசித்து தனது  3பிள்ளைகளையும் மகுடேஸ்வரன் வளர்த்து வந்தார். இந்த நிலையில் மகுடேஸ்வரனுக்கு, ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்த அமரஜோதி (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. தனியார் ஆலையில் வேலை செய்துவந்த இவர், ஏற்கனவே திருமணமாகி கணவர், இரண்டு பிள்ளைகளுடன் அமரஜோதி வசித்து வந்தார்.

அமரஜோதி

மகுடேஸ்வரன் - அமரஜோதி இடையேயான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இதனால் அமரஜோதி குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், நேற்று அய்யனார்புரம் அருகேயுள்ள பள்ளப்பட்டி சாலையில் தனியார் தோட்டத்தில் மகுடேஸ்வரன் மற்றும் அமரஜோதி இருவரும் ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக தொங்கினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அமரஜோதி

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web