பதறுதே ! 5 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை!!

 
சிறுமி

நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சின்னஞ்சிறுகுழந்தை தொடங்கி வயதான பாட்டி வரை இந்த கொடூரங்கள் தொடர்கிறது. பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்துவருவதாக கவலை தெரிவித்துள்ளனர் சமூக ஆர்வலர்கள். அந்த வகையில் கேரளாவில் 5வயது சிறுமியை கடத்தி  பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அலுவா அருகே உள்ள தைக்காட்டுக்காராவில் வசிக்கும் தம்பதிகளுக்கு 5 வயதில் ஒரு பெண்குழந்தை .

சிறுமி

இந்த குழந்தை கடந்த   வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென  காணாமல் போனாள் . அக்கம்பக்கத்தில் தேடி பார்த்த பெற்றோர்  உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.   இதில் சிறுமியை ஒருவன் கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் அந்த சிறுமியை கடத்திக் கொண்டு திரிசூர் நோக்கி சென்ற பேருந்தில் ஏறி சென்றதும் பதிவாகியிருந்தது. இதையடுத்து, சிறுமியை மீட்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். சுமார் 20 மணி நேரம் தொடர் தேடலில் சந்தைக்கு பின்பக்கமாக பெரியாறு ஆற்றை ஒட்டி சிறுமி சடலமாக கிடந்தாள்.  சிறுமியின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. பிறப்பு உறுப்புகளிலும் கோரமான காயங்கள் இருந்தன. மாநிலம்  ழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை கடத்தியவன் பீகார் மாநிலத்தில் வசித்து வரும்   அஸ்பாக் ஆலம்.  அவனை கைது செய்தது விசாரித்ததில் முதலில் சிறுமியை வேறு ஒரு கும்பலிடம் ஒப்படைத்ததாக கூறினான்.  

சிறுமி

இந்த கொடூர சம்பவத்தில் மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  இது குறித்து  முதல்வர் பினராயி விஜயனுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இதில், இந்த கொடூர செயலில் பின்னணியில் உள்ள நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உட்சபட்ச தண்டனையை வாங்கி கொடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு போலீசார் மீது நம்பிக்கை வரும் மனதில் உள்ள  அச்சம் நீங்கும். வெளி மாநில தொழிலாளர்களின் அடையாள விவரங்களை வாங்கி காவல் நிலையங்களில் வைத்து இருக்க வேண்டும் என பல அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.  கேரளாவில் 5-வயது சிறுமி கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web