55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று... 2,000க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை!

 
படகுகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை மற்றும் வானிலை எச்சரிக்கை காரணமாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தூத்துக்குடி வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் இன்றும், நாளையும் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

படகுகள்

இதனால் தூத்துக்குடியில் 272, தருவைகுளத்தில் 200, வேம்பாரில் 50 விசைபடகுகளும், மாவட்டம் முழுவதும் சுமார் 2ஆயிரம் நாட்டுப் படகுகளும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 10 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ள நாட்டு படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் பத்திரமாக கரை திரும்புமாறு மீன்வளத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வானிலை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 

தூத்துக்குடி வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் டிச.12,13-ஆகிய தேதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

இதனால் தூத்துக்குடியில் 272 விசைப்படகுகளும், தருவைகுளம் 200, வேம்பார் 50 விசைபடகுகளும், மாவட்டம் முழுவதும் சுமார் 2ஆயிரம் நாட்டுப் படகுகளும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ள நாட்டு படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் பத்திரமாக கரை திரும்புமாறு மீன்வளத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!