6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!! அதிரடி உத்தரவு!!

 
தமிழக அரசு

தமிழகத்தில் துறை வாரியாக மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பல திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை  பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக  6 ஐபிஎஸ் அதிகாரிகள்  பணியிட மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதன்படி காவல் தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.யாக காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஏஜி பாபு நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனிவிஜயா காவலர் பயிற்சி பிரிவு டிஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎஸ்

கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளராக காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகர துணை ஆணையராக ராதாகிருஷ்ணன் (தலைமையிடம்) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராக இருந்தார். மேலும் சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

போலீஸ்

குடிமைப் பொருள் சிஐடி பிரிவில் கண்காணிப்பாளராக இருந்த பாஸ்கரன் திருப்பூர் மாநகர துணை ஆணையராக (தலைமையிடம்) நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இந்த திடீர் பணியிடமாற்றத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை. மேலும் அவரவர் தங்கள் பொறுப்புகளில் இருந்த அனைத்து அலுவல் பணிகளையும் விரைவில் முடித்துவிடும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளார்.தமிழக அரசு திடீரென்று 6 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web