இளைஞரை கொலை செய்த 6 சிறார்கள்!! பகீர் பிண்ணனி!! சீரழியும் இளைய சமுதாயம்!!

 
கரிமேடு

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ். இவரது தந்தை வீரய்யா. 21 வயதான பிரகாஷ் பழங்காநத்தம் பகுதியில் ஆட்டோ ஒர்க் ஷாப் ஒன்றில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் விபத்தில் சிக்கியதால் அவரது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரகாஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

சிறார்கள்

இந்நிலையில் பிரகாஷ் தனது வீட்டின் முன்பு உள்ள ரெயில்வே தண்டவாள பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவர்களுடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது பிராசுக்கும், சிறுவர்களுக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டதால், பிரகாஷ் அவர்களை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் 6 பேர் திடீரென்று, வீட்டு வாசலில் அமர்ந்திருந்த பிரகாசை சரமாரியாக வெட்டியுள்ளனர். வலி தாங்க முடியாத பிரகாஷின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அவரது சித்தி வாசுகியையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

சிறார்கள்
இதைத்தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் துடித்த பிரகாஷை மீட்ட உறவினர்கள் அவரை உடனடியாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  இருப்பினும் சிகிச்சை பலனின்றி பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பிரகாசின் தந்தை வீரய்யா போலீசில் புகார் அளித்தார். 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த எஸ்.எஸ்.காலனி போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த 6 சிறுவர்களை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதை தலைக்கேறிய வாலிபர், 6 சிறுவர்களை அடித்த சம்பவம் கொலையில் முடிந்த கோர சம்பவம் மதுரையில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web