குழம்பில் கிடந்த குப்பையால் 6 பேருக்கு வாந்தி, மயக்கம்!!

 
தோசை

சென்னை தியாகராய நகர் பிஞ்சுளா சுப்பிரமணியன் தெருவில் செயல்பட்டு  வருகிறது பிரபல செட்டிநாடு அசைவ உணவகமான விருதுநகர் அய்யனார் ஹோட்டல். இதில் இன்று பிற்பகல்   1:30 மணிக்கு   ஐடி துறையில் பணிபுரியும் பெண் ஒருவர் உட்பட 15க்கும் மேற்பட்டோர் மதிய உணவு சாப்பிட வந்தனர்.

குப்பை

இதில் பலர் கோழி பிரியாணி , சிக்கன், மட்டன் அசைவ சாப்பாடு ஆகியவற்றை ஆர்டர் செய்து உண்டனர். இதில் சம்பந்தப்பட்ட ஐடி பெண் ஊழியர் உட்பட 6 பேருக்கு உடனடியாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து உணவு சாப்பிட்டவர்களுக்கு உணவின் தரம் குறித்து கேள்வி எழுந்தது.எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்த நிலையில், அதிகாரிகள் இன்று மாலை சரியாக 3 மணிக்கு உணவகத்தில் ஆய்வு நடத்தினர்.

தோசை

பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்ட  உணவு மற்றும் உணவு தயாரிக்கும் கூடத்தில் நேரில் ஆய்வு நடத்திய அதிகாரிகள் இறைச்சி கெட்டுப் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சீல் வைக்கவும் உரிய விளக்கம் கோரி நோட்டீசும் வழங்கிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், உணவக உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web