ரேஷன் கடைகளில் 6000 பணியிடங்கள்!! உடனே அப்ளை பண்ணுங்க!!

 
ரேஷன்

தமிழகத்தில் அரிசி, பருப்பு, சர்க்கரை உட்பட அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில்  ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியா முழுவதும்  ரேஷன் கடைகளில் 6,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் ஆன்லைன் மூலம் நிரப்பப்பட உள்ளன. விற்பனையாளர்கள்  பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர்கள் பதவிக்கு  10-ம் வகுப்பத் தேர்ச்சி   பெற்றவர்களும்  விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரேஷன்

காலிப் பணியிடங்கள்:

கோயம்புத்தூர் - 233, விழுப்புரம் - 244, விருதுநகர் - 164, புதுக்கோட்டை - 135, நாமக்கல் - 200, செங்கல்பட்டு - 178, ஈரோடு - 243, திருச்சி - 231, மதுரை - 164, ராணிப்பேட்டை - 118, 
திருவண்ணாமலை - 376, அரியலூர் - 75, தென்காசி - 83, திருநெல்வேலி - 98, சேலம் - 276, கரூர் - 90, தேனி - 85, சிவகங்கை - 103, தஞ்சாவூர் - 200, ராமநாதபுரம் - 114, பெரம்பலூர் - 58, கன்னியாகுமரி - 134, திருவாரூர் - 182, வேலூர் - 168, மயிலாடுதுறை - 150, திருப்பத்தூர் - 240, கள்ளக்குறிச்சி - 116, திருப்பூர் - 240, நீலகிரி - 76, சென்னை - 344, தருமபுரி - 98, நாகப்பட்டினம் - 98, திருவள்ளூர் - 237, தூத்துக்குடி - 141, கடலூர் - 245, திண்டுக்கல் - 312, காஞ்சிபுரம் - 274

விற்பனையாளர் பணிக்கான கல்வி தகுதி:

12-ம் வகுப்பு தேர்ச்சி     அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கட்டுநர் பணிக்கான கல்வி தகுதி:

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள்‌ நேர்முகத்‌ தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ அடிப்படையிலும்‌, விண்ணப்பதாரர்‌ சார்ந்துள்ள வகுப்பு வாரியான இன சுழற்சி அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

ரேஷன்

விண்ணப்பிக்கும் முறை:

http://www.drbobo.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். நேரிலோ அல்லது தபாலிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ளவர்கள் நவம்பர் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web