இன்று முதல் திரையரங்குகளில் 7 நாட்களுக்கு சிறப்பு காட்சிகள்! தமிழக அரசு அனுமதி!

 
தீபாவளி திரைப்படங்கள்

இன்று முதல் இம்மாதம் 27ம் தேதி வரை தமிழக திரையரங்குகளில் தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாகும் திரைப்படங்களை சிறப்பு காட்சிகளை வெளியிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இனிப்பு, பட்டாசு என்று ஒரு பக்கம் தீபாவளியை கொண்டாடினாலும், பெரிய நடிகர் படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு  கார்த்தியின் ‘சர்தார்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன.  இந்தப் படங்களுக்கான புரமோஷன் நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அத்துடன் கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் கடைசி இரண்டு திரைப்படங்களும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பல இடங்களில் வெற்றி அடைந்தன. இதனால் அவர்கள் நடித்துள்ள சர்தார் மற்றும் பிரின்ஸ் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன்  பிரின்ஸ்

இதன் காரணமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகும் இரண்டு திரைப்படங்களுக்கும் சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். மேலும் தங்களுக்கு வழக்கம்போல் அனுமதி கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றோம் என்றும் அப்போது தெரிவித்திருந்தார்.

அட தூள்…! சந்திரமுகியாக அனுஷ்கா ரிட்டர்ன்ஸ்? கூடவே வடிவேலு!எகிறும் சினிமா பிசினஸ்!?

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று அக்டோபர் 21 முதல் 27-ம் தேதி வரை தொடர்ந்து 7 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு காட்சிகள் திரையிட திரையரங்குகளுக்கு தமிழ்நாடு அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web