703 ரேஷன் கடைகள் மூலம் மகளிர் உரிமை தொகை டோக்கன்!!
தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு கலைஞர் உரிமை தொகை செப்டம்பர் 15 முதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன்கள் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பப் படிவம் பெறுவது குறித்த முன்னோட்ட பயிற்சி முகாமை ஆய்வு செய்து செய்திக்குறிப்பு ராதாகிருஷ்ணன் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தமிழகம் முழுவதும் 703 ரேஷன் கடைகள் மூலம் இதுவரை 15 சதவீதம் டோக்கன், விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றபடி முகாம்கள் அமைக்கப்பட்டு அந்தந்த ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரேஷன் கடைகளுக்கு ஏற்றவாறு முகாம்களின் எண்ணிக்கை மாறுபடும். 500 குடும்ப அட்டைகள் கொண்ட ரேஷன் கடைக்கு ஒரு முகாம் என்ற அளவில் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் கொண்ட ரேஷன் கடைகளுக்கு முகாம்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?