அதிரடி!! தமிழகத்தில் 76 காவல்துறை டிஎஸ்பிக்கள் இடமாற்றம்!!

தமிழகத்தில்  76  காவல்துறை  டிஎஸ்பிக்களை  இடமாற்றம்  செய்து  தமிழக  காவல்துறை  டிஜிபி  சைலேந்திரபாபு  உத்தரவிட்டுள்ளார்.

 
டிஜிபி சைலேந்திரபாபு  உத்தரவு

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் வழக்கு தொடர்பான பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டு , பின்னர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மூன்று டி.எஸ்பிக்களான  கண்ணன் - மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படை  உதவி கமாண்டண்ட்டாகவும்,   சம்பத் -  ராமநாதபுரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சுரேஷ் -  ராமநாதபுரம் சரகர் போலீஸ் பயிற்சி மையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தாம்பரம் காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக சுந்தரம் யமிக்கப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக ரித்து உள்ளிட்ட 76 டிஎஸ்பிக்களை அதிரடியாக மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த பணி மாற்றம் செய்யப்பட்ட 76 டிஎஸ்பிக்களில் பெரும்பாலானோர் காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பிக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அடிக்கடி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.  அந்தவகையில் தற்போது   காவல்துறையில் 76 டிஎஸ்பிகளை இடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

From around the web