பெரும் சோகம்... ஸ்ட்ராபெர்ரி பழத்தால் 8 வயது சிறுவன் பலி... கதறித் துடித்த பெற்றோர்!

 
ஸ்ட்ராபெர்ரி

சிலருக்கு சில உணவு பொருட்கள் ஒவ்வாமை . அந்த பொருட்களால் சில நேரங்களில் ஆபத்துக்கள் ஏன் உயிரிழப்புக்கள் கூட ஏற்பட்டு விடுவதுண்டு. அவரவர் உடல் வாகுக்கு ஏற்ப நம்முடைய உணவு, பழக்க வழக்கங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். சின்னஞ்சிறு சிறுவனுக்கு ஸ்ட்ரா பெரி பழம் அலர்ஜி இருந்திருக்கிறது. அந்த சிறுவன் அதை கண்டுகொள்ளாமல் பழங்களை உண்ணவே உயிருக்கே ஆபத்தாக முடிந்துள்ளது . இதனை அறிந்த பெற்றோர்கள் கதறித் துடித்தனர்.

ஸ்ட்ராபெர்ரி

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணம் மேடிசன்வில்லே நகரில் உள்ள பள்ளியில் நிதி திரட்டும் பொருட்டு 8 வயது சிறுவன் ஸ்ட்ராபெர்ரி பழங்களை அதிகமாக உண்டுள்ளான். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தூக்கத்தில் இருந்த சிறுவனை எழுப்பிய பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்த அந்த பெற்றோர், சிறுவன் ஒவ்வாமை அறிகுறிகளை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவனுக்கு பொனட்ரில் அளித்துள்ளதாகவும், குளிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

 சிறுவன் பலி

இருப்பினும் எந்த மாற்றமும் தென்படாததுடன், நிலைமை மோசமடைய, இரவு 10.30 மணியளவில் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சில மணி நேரத்திற்கு பின்னர், வீடு திரும்பியுள்ளனர்.இந்த நிலையிலேயே வெள்ளிக்கிழமை பகல் பள்ளிக்கு அனுப்பும் பொருட்டு தூக்கத்தில் இருந்த சிறுவனை பெற்றோர் எழுப்பியுள்ளனர். இதனையடுத்து மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களே சிறுவன் மரணமடைந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வெளியான பிரேத பரிசோதனை ஆய்வில், சிறுவன் ஒவ்வாமை காரணமாகவே மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web