அசத்தல்.. மாதம் ரூ2லட்சம் சம்பாதிக்கும் 9ம் வகுப்பு மாணவன்!!

 
சைலேஷ்

இன்றைய பிள்ளைகளுக்கு தொழில்நுட்பம் மேல் தான் ஆர்வம் அதிகம். எந்நேரமும் கையில் மொபைல் தான். அதனையே தொழிலாக மாற்றி 9ம் வகுப்பு மாணவன் மாதம் ரூ2லட்சம் சம்பாதித்து வருகின்றான். விருதுநகர் மாவட்டத்தில் இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த நல்லபெருமாள் - முத்துலட்சுமியின் மகன் சைலேஷ்.இவர்  உலகின் பிரபல நிறுவனமான அமேசான் உடன் ஆப் செய்து தருவதாக ஒப்பந்தம் செய்துள்ளார். 

சைலேஷ்
 சைலேஷ் குடும்பம் விருதுநகரை பூர்வீகமாக கொண்டிருந்தாலும்  கடந்த 8 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகின்றனர். பெற்றோர் இஸ்திரிப்பணி செய்து வருகின்றனர்.  குடும்பத்தின் வறுமையை  அறிந்த மகன் சைலேஷ் தொழில்நுட்பத்தில் தனது அறிவை வளர்த்துக் கொண்டார்.இவருக்கு மொபைல் போன்கள் மீது ஆர்வம் அதிகம். இதனால்  செயலிகள் குறித்து நன்கு கற்று அறிந்து   தொழில்நுட்பங்களை படித்து சொந்தமாக இதுவரை 3 செயலிகளை உருவாக்கியுள்ளார். இதில்  விளையாட்டு தொடர்பான இரண்டு செயலிகளை அமேசானிடம் விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து  அமேசான் நிறுவனம் சைலேஷ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ரூபாய் பணம் 500

அதன் அடிப்படையில் சைலேஷ் அமேசான் நிறுவனத்திற்கு செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.  தொடக்கத்தில் கேம் விளையாட மொபைல்  போன்களைப் பயன்படுத்தி வந்த  சைலேஷ் தொழில்நுட்பம் மீதிருந்த ஆர்வத்தினால் தற்போது அதில் நிபுணத்துவம் பெற்றவராக மாறியுள்ளார். மேலும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், வேட்கையும் இவரை  நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி  முறையான வழிகாட்டுதல் காரணமாக செயலியை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறும் சைலேஷ், தனது கணினி ஆசிரியர்கள் மற்றும்  உறுதுணையாக  இருக்கும் நண்பர்களுக்கும்  நன்றியை தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web