சுவர் இடிந்து 3 வயது குழந்தை பலி!!! கனமழையால் சோகம்!!

 
சுவர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உள்ள சோமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர். கட்டடத் தொழிலாளியான இவருக்கு வாணி என்ற மனைவியும், வர்ஷினி (3) என்ற பெண் குழந்தையும் ஓர் பெண் கைக்குழந்தையும் உள்ளனர்.

திருப்பத்தூர்

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக சுரேந்தரின் வீடு கனமழையில் நனைந்து மிகுந்த சேதாரம் அடைந்துள்ளது.இதனைத்தொடர்ந்து நேற்று மாலை சுரேந்திரனின் குழந்தை வர்ஷினி வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தபோது கனமழையால் சேதமடைந்த வீட்டின் மேல்பக்க சுற்றுச்சுவர் இடிந்து வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த வர்ஷினி மீது விழுந்துள்ளது.

சிறுவன்

இதில் படுகாயமடைந்த குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த போதே சிகிச்சைப் பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. உடனடியாக இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், வீட்டின் மேல்பக்க சுவர் இடிந்து விளையாடி கொண்டிருந்த குழந்தையின் மீது விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web