7 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு தீ வைத்து எரிப்பு!! கொடூரத்தின் உச்சம்!!

 
போக்சோ

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனளிக்காத நிலையில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தேனி மக்களிடையே பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சிறுவன் பலி

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்கன்வாடி மையத்தில் 7 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். இந்த அங்கன்வாடி தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்க நாயக்கனூரில் அமைந்துள்ளது. அப்போது அந்த சிறுமியை 17 வயது சிறுவன் ஒருவன் அங்கிருந்து கடத்திச் சென்றதுடன் பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்துவிட்டு தப்பியோடினார். இதில் படுகாயமடைந்த சிறுமி, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்த 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சிறுமியின் பெற்றோர், கிராம மக்கள் என அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறை

அங்கன்வாடியில் விளையாடிக் கொண்டிருந்த பால்மனம் மாறாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் தீ வைத்து எரித்துக் கொலை செய்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.  பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இதுபோன்ற அசம்பாவிதங்கள் வெளிச்சம் போட்டு காட்டுவது வேதனைக்குரிய விஷயமாகும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web