பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்தபோது விபரீதம்.. சிறுவன் மீது கார் மோதி பலி..!

 
mailaduthuarai

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் பழனி. இவரது மகன் தினேஷ் (8). இவர் தீபாவளி அன்று வீட்டின் அருகில் பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆக்கூரில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது. 

accident

இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்ட அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் சிறுவனை மீட்டு அருகில் உள்ள திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இது குறித்து தகவல் அறிந்த பொறையார் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, உதவி ஆய்வாளர் நடராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர்.

Paraiyar

மேலும் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி அன்று சிறுவன் உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 
From around the web