கார் டயர் வெடித்து , மரத்தில் மோதி பயங்கர விபத்து !! 2 பெண்கள் பலி!! 4 குழந்தைகள் உட்பட 9 பேர் படுகாயம்!!!

 
விபத்து

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பெத்துரெட்டிபட்டியில் வசித்து வருபவர்  65 வயதான பழனிச்சாமி. இவருடைய  மனைவி சங்கரேஸ்வரி. இவர்களுக்கு 4 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர்.  கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பழனிசாமியின் மகள் பிரபா திருச்செந்தூரில் வசித்து வரும் இளைஞரை திருமணம் செய்து கொண்டார். அவர் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

விபத்து

அவருக்கு சோறு சமைத்து கொடுக்கும் சடங்கிற்காக பழனிசாமி, சங்கரேஸ்வரி, அவர்களது மகன்களான  கனக தர்மராஜ், சங்கர், ராமர், மருமகள் முத்துலட்சுமி, மற்றும் அவர்களது குழந்தைகள், உறவினர் என  மொத்தம் 11 பேர் ஒரே காரில் திருச்செந்தூர் புறப்பட்டு சென்றனர்.  காரை சங்கர் ஓட்டி சென்றார். இன்று காலை சுமார்  7 மணிக்கு  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலை அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென கார் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கார் நிலை தடுமாறி அருகில் சாலையோரத்தில் இருந்த  வேப்ப மரத்தின் மீது கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் பயணம் செய்தவர்கள் கூச்சலிட்டனர்.

விபத்து

இந்த  அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து ஓட்டப்பிடாரம் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடனடியாக  காரின் இடிபாட்டுக்குள் சிக்கியிருந்த 11 பேரையும் மீட்டனர். இந்த விபத்தில் சங்கரேஸ்வரி, மருதாயி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 4 குழந்தைகள் உட்பட மீதமுள்ள 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 9 பேரும் மீட்கப்பட்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  உயிரிழந்தவர்கள் 2 பேரின் உடல்  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web