சூட்கேசில் கள்ளக்காதலின் சடலம்!! போலீசில் சிக்கிய பெண்ணின் பகீர் வாக்குமூலம்!!

உத்தரபிரதேசத்தில்  கள்ளக்காதலனை  கொலை  செய்து  சூட்கேசில்  அடைத்து வைத்த  இளம் பெண்ணை  போலீசார்  அதிரடியாக  கைது  செய்தனர். 

 
கள்ளக்காதலன் கொலை

உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் திலா மோர் ஸ்டேஷன் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது  சந்தேகத்துக்கிடமான வகையில்  ஒரு பெரிய டிராலி சூட்கேசுடன் அங்கு வந்த பெண்ணை நோட்டமிட்ட போலீசார் அதனை இழுக்க முடியாமல் அவர் இழுத்து வந்ததை கண்டு  அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது போலீசாரை கண்டு அஞ்சிய அவர் காவல்துறையின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

மேலும் காவல்துறையினரின் கேள்வி வலையத்திலிருது  தப்பியோடவும் அவர்  முயற்சித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார்  இளம்பெண்ணை பிடித்து அவர் கொண்டு வந்த டிராலி சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது.  இதனால் போலீசார் அதிர்ச்சியில் உறைந்த போலீசார் பிடிபட்ட இளம்பெண்ணை கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அந்த  பெண்ணின் பெயர் பிரீத்தி சார்மா என்பதும், திருமணமான இவர் காஜியாபாத் துளசி நிகேதனில் வசித்து வந்ததும்,  இவரது கணவர் தீபக் யாதவை பிரிந்த பிரீத்தி சர்மா கடந்த 3 மூன்று வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.

இந்நிலையில் சம்பால் பகுதியை சேர்ந்த பிரோஸ் என்பவருடன் பிரீத்திக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பிரீத்தி பிரோஸ் கானிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். ஆனால் பிரோஸ் இதற்கு ஒபபுக் கொள்ளமல் அவரை தட்டி கழித்து வந்ததோடு அவரை அவமானபடுத்தியும் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரீத்தி, பிரோஸின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை மறைக்க பெரிய டிராலி சூட்கேசில் அடைத்து வைத்து மறைவான இடத்திற்கு கொண்டு சென்று போட்டுவிட திட்டமிட்டது தெரியவந்தது.  பின்னர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web