கிரேன் சக்கரத்தில் சிக்கி தம்பதியர் பலி! துக்க நிகழ்வு சென்ற போது சோகம்!

 
தம்பதி

 ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் விநாயகர் கோவில் 8வது தெருவில் வசித்து வருபவர் 75 வயது சுப்பிரமணி. இவர் வன ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  இவரது மனைவி 65 வயது பாப்பாத்தி . இருவரும் நாதகவுண்டன்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக   நேற்று காலை இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டனர். 

விபத்து

செட்டிபாளையம் பிரிவு பூந்துறை ரோட்டில் சென்ற போது பின்னால் வந்து கொண்டிருந்த கிரேன், சுப்பிரமணி ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்த தம்பதியினர் கிரேனுக்குள் சிக்கி கொண்டார்கள். அப்போது அவர்கள் இருவர் மீதும் கிரேனின் சக்கரம் ஏறி இறங்கியது.இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தனர்.

ஈரோடு

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தாலுகா போலீசார் கிரேனுக்கு அடியில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த தம்பதியினர் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஈரோட்டில் கிரேன் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web