பிரபல ரவுடி ஓடஓட வெட்டிப் படுகொலை!! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்!!

 
ரவுடி கொலை

புதுக்கோட்டை அருகே பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மேலகல்கண்டார்கோட்டையை சேர்ந்தவர் இளவரசன். வயது 30. புதுச்சேரி துணை சபாநாயகரை கொல்ல முயன்ற வழக்கு உள்பட இவர் மீது பல கொலை, கொலை மிரட்டல், கொலை முயற்சி, திருட்டு வழக்குகள் உள்ளன.

ரவுடி கொலை

இதனிடையே இளவரசன் வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராக சென்றுள்ளார். இந்நிலையில் அவர் புதுக்குளம் கரை ஓரம் சென்று கொண்டிருந்த போது   அங்கு வந்த மர்ம கும்பல், இளசரசனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் அவர்களிடம் இருந்து இளவரசன் தப்பி ஓட முயன்றுள்ளார். ஆனால் அந்த கும்பல் இளவரசனை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தது.

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி வந்திதா பாண்டே மற்றும் போலீசார் உயிரிழந்தவரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிசார் மோப்பநாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணியில்   தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  

From around the web