விபத்தில் உயிரிழந்த நண்பன்... குற்ற உணர்ச்சியில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை! செஞ்சியில் சோகம்

 
பிரபு

நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஒன்றாக சென்ற நிலையில், விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நண்பனை நினைத்து, மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற நண்பனும் தற்கொலைச் செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருபவர் திருமால் (எ) ராஜா. இவரது மகன் சீனிவாசன் (20). சீனிவாசன், தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே பகுதியில் கூரியர் சர்வீஸ் ஒன்றில் வேலைப் பார்த்து வந்தவர் பிரபு(20).  நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் செஞ்சியில் இருந்து அங்கராயநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். 

Accident

இருசக்கர வாகனத்தை பிரபு ஓட்டி சென்றார். சீனிவாசன் பின்னால் அமர்ந்திருந்தார். அங்கராயநல்லூர் அருகே இவர்கள் சென்று  கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சீனிவாசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த பிரபு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்தில் சீனிவாசன் பலியானதை அறிந்த பிரபு தன்னுடன் வந்த நண்பனுக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி விரக்தி அடைந்தார். இதில் மனமுடைந்த அவர் கூர்மையான இரும்பு ஆயுதத்தால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்றி மீண்டும் அதே மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். 

பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபு, அதன் பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஆனால் தனது ஆருயிர் நண்பர் சீனிவாசன் விபத்தில் பலியானதை அறிந்து மன வேதனை அடைந்த பிரபு தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

Gingee

இந்நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் வீட்டில் அயா்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது, படுக்கையில் இருந்து எழுந்த பிரபு வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் நண்பர் பலியானதால் உயிர் தப்பிய வாலிபர் 2வது முறை முயற்சியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அடுத்தடுத்து தங்களது நண்பர்களை இழந்த எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் உள்ளவர் அதிர்ச்சியடைந்தனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web