மருது சகோதரர்களுக்கு முழு உருவ வெண்கலச் சிலை!! ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு!!

 
மருது சகோதரர்கள்


தமிழக பொதுப்பணித்துறை சார்பில்,  சுதந்திர போராட்டத் தலைவர்கள் மருது சகோதர்களுக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைப்பது குறித்து ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் தமிழக சட்டப்பேரவையில் செய்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதிலும் குறிப்பாக அப்போது, சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், தியாகிகளை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரூ.1 கோடியில் சிலைகள் நிறுவப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

மருது சகோதரர்கள்

அதன்படி நிறுவப்படும் சிலைகள் மற்றும் அதன் இடங்கள் குறித்தும் அவர் தெரிவித்திருந்தார். சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுசகோதரர்களுக்கு சிலை நிறுவப்படும் என்று தெரிவித்தார். மேலும் கடலூரில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள், கீழ்பழுவூரில் தியாகிசின்னசாமிக்கு சிலையும், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு சிலையும் நிறுவப்படும் என்று தெரிவித்திருந்தார்.

சென்னை ராணி மேரி கல்லூரியில் வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூருக்கும், சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கும் சிலை நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மயிலாடுதுறையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கும், புதுக்கோட்டையில், முத்துலெட்சுமி ரெட்டி, ராணிப்பேட்டையில் தமிழ் அறிஞர் மு.வரதராசனாருக்கும் சிலைகள் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில தமிழக பொதுப்பணித் துறை சார்பில், தற்போது சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதர்களுக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைப்பது குறித்து ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்
சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் வீரர்கள் சின்ன மருது மற்றும் பெரிய மருது ஆகியோருக்கு அமைய உள்ள முழு உருவ வெண்கலச் சிலைக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சிலைகள் அமைக்கப்படும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த சிறப்புமிக்க நடவடிக்கைகளுக்கு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மூத்த அரசியல் நோக்கர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web