வயிற்று வலிக்கு வந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!! பூசாரியை தட்டி தூக்கிய காவல்துறை!!

 
பூசாரி

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பழனி (வயது 65) என்பவர் பூசாரியாக பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி பிரச்சினை இருப்பதை பூசாரி பழனி எப்படியோ தெரிந்து வைத்துள்ளார். இதனால் சிறுமியின் தாயை சந்தித்த பூசாரி, ஒரு சிறப்பு பூஜை செய்தால் சிறுமியின் வயிற்றில் உள்ள வலியை போக்கிவிடலாம் என்று கூறியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

இதை நம்பிய சிறுமியின் தாயும் பூஜைக்கு ஏற்பாடு செய்து பூசாரி பழனியை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். சிறுமியின் தாயை வெளியில் அமரவைத்து விட்டு சிறுமிக்கு சிறப்பு பூஜை செய்கிறேன் என்று கூறி பெரிய பாதகத்தை செய்திருக்கிறார். வீட்டிற்குள் இருந்த சிறுமியை பூசாரி பழனி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமியிடம் இது குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியிருக்கிறார்.

இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக சிறுமி கர்ப்பமான நிலையில் அவரது தாய்க்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று பூசாரி பழனி மீது புகார் அளித்தார்.

சிறை
இதைத்தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய பூசாரி பழனி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது புதுக்கோட்டை எஸ்.பி.வந்திதா பண்டேயின் பரிந்துரைப்படி, சிறையில் இருக்கும் பூசாரி பழனியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் சிறையில் இருந்த பழனி தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பூசாரி குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web