பள்ளியில் படிக்கும்போதே கர்ப்பமான சிறுமி : உல்லாசம் அனுபவித்த பட்டதாரி இளைஞர் மீது பாய்ந்தது போக்சோ!!

 
பட்டதாரி இளைஞர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த போத்துவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் டான்போஸ்கோ(50). கூலி வேலை செய்து வரும் டான்போஸ்கோவிற்கு கிருஸ்துராணி(40) என்ற மனைவியும், 3 பெண் பிள்ளைகளும் உள்ளனர். டான்போஸ்கோவின் 17 வயதுடைய மூத்த மகள்  திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த நிலையில் ஐந்து மாதங்களாக வீட்டிலேயே இருந்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று பிற்பகல் சிறுமி  வயிறு வலிப்பதாக அவருடைய தாயான கிருஸ்துராணியிடம் கூறிய நிலையில் ஆட்டோ மூலம் வேட்டவலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர்.  அப்பொழுது மருத்துவமனை வளாகத்தில் சென்றவுடன் ஆட்டோவிலேயே சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

உடனே தாயையும் குழந்தையும் மீட்ட மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதனிடையே குழந்தையை பெற்றெடுத்தது 17 வயது சிறுமி என  தெரிந்த நிலையில் இது தொடர்பாக மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போத்துவாய் கிராமத்திற்குச் சென்ற செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பி.காம் படித்த பட்டதாரி இளைஞர் வின்சென்ட்  என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுமியை காதலித்தாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனால் சிறுமி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே கர்ப்பம் அடைந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சிறுமி பெற்றெடுத்த பெண் குழந்தைக்கு தந்தையான பட்டதாரி இளைஞர் வின்சென்ட் விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளதாகவும் அவருடைய பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கபட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பட்டதாரி இளைஞரான வின்சென்ட் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ள செஞ்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞரை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

From around the web