குப்பைத் தொட்டிக்குள் துப்பாக்கி!! மதுரை சிறைச்சாலையில் பரபரப்பு!!

 
துப்பாக்கி

மத்திய சிறை அருகே உள்ள குப்பைத் தொட்டிக்குள் நவீன துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.தூய்மை பணியாளர்கள் இன்று காலையில் தங்கள் பணிகளை மேற்கொண்டு வந்தனர். அவர்கள்  மதுரை மத்திய சிறைச்சாலை வாசல் அருகே அமைந்துள்ள குப்பைத் தொட்டியில் இருந்தும் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

மதுரை சிறைச்சாலை

குப்பைத் தொட்டிக்குள் சிறிய அளவிலான கையடக்க துப்பாக்கி ஒன்றை கண்டெடுத்தனர். அது மிகவும் நவீன ரக துப்பாக்கியாகவும் இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தூய்மை பணியாளர்கள் உடனடியாக கரிமேடு போலீஸ் நிலையத்திற்கும், சிறை நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், நடத்திய விசாரணையில், குப்பைத் தொட்டிக்குள் இருந்த துப்பாக்கி பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து இருந்தது தெரிய வந்தது. எனவே யாரேனும் இதனை வேண்டாம் என்று கருதி குப்பைத் தொட்டியில் வீசி சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

madurai junction

இருப்பினும் மத்திய சிறைச்சாலை அருகே குப்பைத் தொட்டிக்குள் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. மேலும் இதை வீசிச் சென்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது குறித்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கு சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web