தலை மீது அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்கம்பி!! அதிர்ச்சி வீடியோ!!

 
டிக்கெட் பரிசோதகர்

மேற்கு வங்காளத்தில், ரெயில் நிலையம் ஒன்றில் நின்று பேசிக் கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகரின் தலை மீது எதிர்பாராமல் உயர் அழுத்த மின்கம்பி   அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்காள மாநிலம் பஷிம் மதினிப்பூர் மாவட்டம் ஹாரக்பூரில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக சுஜன் சிங் சர்தார் என்பவர் பணியாற்றி வருகிறார்.

டிக்கெட் பரிசோதகர்

டிக்கெட் பரிசோதகர் சுஜன் சிங் நேற்று ரெயில் நிலையத்தில் நின்று சக ஊழியருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ரெயில் தண்டவாளத்திற்கு மேலே செல்லும் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து திடீரென டிக்கெட் பரிசோதகர் சுஜன் சிங் தலை மீது  விழுந்தது. உயர் அழுத்த மின்கம்பி தலையில் விழுந்ததில் சுஜன் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. இதில்,   அவர் அருகில் இருந்த தண்டவாளத்தில் சுருண்டு விழுந்தார்.  இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்றொரு ஊழியர்,   அங்கிருந்த ரெயில்வே ஊழியர்கள், பயணிகள் சுஜனை   மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.  


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிக்கெட் பரிசோதகர் சுஜனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   ரெயில் நிலையத்தில் தண்டவாளத்திற்கு மேலே செல்லும் உயர் மின் அழுத்த கம்பி எவ்வாறு அறுந்து விழுந்தது என்பது குறித்து ரெயில்வே போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிக்கெட் பரிசோதகர் சுஜன் தலை மீது உயர் மின் அழுத்த கம்பி விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து அவர் ரெயில் தண்டவாளத்தில் விழும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

From around the web