35,000 பாம்புகளைப் பிடித்தவர்.. பாம்பு கடித்து பரிதாபமாக பலி!

 
லோகேஷ்

பாம்பு லோகேஷ் என்று செல்லமாக அழைக்கப்பட்ட லோகேஷ் நாகப்பாம்பு கடித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெங்களூர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாம்பு லோகேஷ் என்று பெங்களூர் மக்களால் அழைக்கப்படும் லோகேஷ் இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து காட்டுக்குள் விட்டுள்ளார். இதன் மூலம் மக்களுக்கு அரும்பணியாற்றி வந்தார். நெலமங்களாவில் ‘பரமாத்மா’ என்ற சிறிய ஓட்டல் ஒன்றை நடத்தி வந்த நிலையில், ஆர்கெஸ்ட்ராவில் பாடகராகவும் இருந்து வந்தார்.

லோகேஷ்

இந்நிலையில், கடந்த 17ம் தேதி நெலமங்களா தாலுகாவில் தாபஸ்பேட்டையில் ஒரு விவசாயி அழைத்ததன் பேரில் பாம்பு லோகேஷ் அங்கிருந்த நாகப்பாம்பை பிடிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக விஷமிக்க நாகப்பாம்பு லோகேஷை வலதுகை விரைவில் 2 முறை தீண்டியது. அப்போது அந்த பாம்பை விடாத லோகேஷ் அதனை பிடித்து காட்டுக்குள் விட்ட்டார். பின்னர் விஷம் உடலில் பரவியதில் நிலைகுலைந்து போன அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக நெலமங்களா தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பாம்பு

இந்நிலையில் ஒரு வாரமாக தீவிர சிகிச்சை அளித்தும் பாம்பு லோகேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகள் மீது தீராத காதல் கொண்டிருந்த பாம்பு லோகேஷ் 35 ஆயிரம் பாம்புகளை மீட்டு காட்டுக்குள் விட்டுள்ள போதிலும் அதற்காக எந்த கட்டணத்தையும் வசூலிக்கவில்லை என்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வைரல் வீடியோ!! வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வைரல் வீடியோ!! இனி கார் சாவிய தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web