திருட்டு வழக்குகளில் சிறைக்கு செல்வதில் சதம் அடித்த நபர்!! ருசிகர சம்பவம்!!

 
ஆறுமுகம்

கிரிக்கெட் விளையாட்டில் சதம் அடித்து பார்த்துள்ளோம். ஆனால் இங்கு ஒருவர் திருடி திருடியே நூறு முறை சிறைக்கு சென்ற ருசிகர சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது. கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த சபிர் அஹமது என்பவர் நேற்று  பேருந்தில் பயணித்து கொண்டிருந்தார்.

மொபைல் திருட்டு

அப்போது  இவரது செல்போனை ஒரு நபர் திருடிவிட்டு பேருந்தில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதனை அறிந்த சபிர், உடனிருந்தவர்கள் உதவியுடன் தப்பிக்க முயன்ற நபரை மடக்கி பிடித்து கடைவீதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனையடுத்து தப்பிக்க முயன்றவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் செல்வபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம்  என்பது தெரியவந்தது.

கைது

ஏற்கெனவே இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் இவர் திருட்டு வழக்கில் நூறாவது முறையாக சிறைக்கு செல்கிறார் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

From around the web