நடிகை தற்கொலையில் புதிய திருப்பம்! போலீசார் விசாரணை!
சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த நடிகை தீபா என்ற பவுலின் அவரது வீட்டில் துப்பட்டாவில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்தது. 29 வயதேயான நடிகை தீபா காதல் தோல்வியால் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என்கிற தகவல் முதலில் பரவிய நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர்.
நடிகை தீபா, வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாகவும், துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். சென்னை விருகம்பாக்கம், மல்லிகை அவென்யூவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த நடிகை பவுலின் ஜெசிகா "நான் ஒருவரை காதலித்து வந்தேன். அந்த காதல் கைகூடவில்லை. இதனால் எனக்கு வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை" என உருக்கமான கடிதமும் எழுதி வைத்து இருந்தார்.
இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட நடிகை பவுலின் தீபாவின் காணாமல் போன செல்போன் தற்போது மீட்கப்பட்டுள்ளது. நடிகை தீபா தற்கொலை செய்து கொண்ட போது, முதலில் கதவை உடைத்து பார்த்த பிரபாகரனிடமிருந்து ஐபோனை போலீசார் மீட்டனர்.
இந்த வழக்கில் தற்போது போலீசார், நடிகை பவுலின் தீபா பயன்படுத்திய 3 செல்போன்கள், ஒரு டேப் ஆகியவற்றை மீட்டுள்ளனர். தடையங்கள் எதுவும் அழிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக தடையவியல் ஆய்வுக்கு போலீசார் உட்படுத்தியுள்ளனர். நடிகையின் செல்போன்கள் மீட்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!