விருந்துக்கு சென்ற புதுமணத் தம்பதி நீரில் மூழ்கி பலி! பெரும் சோகம்!

 
சஞ்சய் புதுமண தம்பதி பலி

திருமணமான ஒரே மாதத்தில், விருந்துக்கு சென்ற இடத்தில், புதுமண தம்பதிகள் நீரில் மூழ்கி பலியானது உறவினர்களையும், நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனி மாவட்டம் பொம்மையகவுண்ன்பட்டி, பாலன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அழகர் ராஜா (30). இவர் கோவையில் மருந்துகள் விற்கும் பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி காவியா (22). இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதிகள் போடியில் உள்ள மாப்பிள்ளையின் அக்கா வீட்டுக்கு விருந்துக்கு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று அக்கா மகன் சஞ்சய் என்பவருடன் பெரியாற்று கோம்பை ஆற்றில் குளிப்பதற்காக சென்றனர். நீர் வரத்து திடீரென அதிகரித்ததால் ராஜா சுழலில் சிக்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு சஞ்சய் மற்றும் காவியா ஆகியோர் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

புதுமண தம்பதி பலி
ஆனால் நீர்வரத்து வேகமாக இருந்ததால் 3 பேரும் சுழலில் சிக்கி ஆழமான பகுதிக்கு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போடி போலீசார், வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆகியோர் 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நீரில் மூழ்கி பலி

ஆனால் அதற்குள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் 3 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கமுடிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருந்துக்கு வந்த புதுமண தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web