தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட பயணி!! டிராக்கை கடக்க முயன்ற போது பரிதாபம்!!

 
தண்டவாளம்

மக்கள் படிக்கட்டுகளை பயன்படுத்தாமல் அவசரமாக ரெயில் தண்டவாளங்களை கடந்து செல்லும் போது பெரிய ஆபத்துகளை சந்திக்க நேர்கிறது. அதில் சிலர் உயிரிழக்கும் பரிதாபமும் நடந்துவிடுகிறது. குறிப்பாக ரெயில் தண்டவாளத்தை போன் பேசியபடியே கடப்பதும், காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டபடியே கடப்பதும் தற்போது பேஷனாகிவிட்டது.


உத்தரபிரதேசத்தின் இடாவாவில் உள்ள பரத்தானா ரெயில் நிலையத்தில் இண்டெர்சிட்டி ரெயில் ஒன்று கடந்து சென்றபோது நடைமேடையில் இருந்த நபர் திடீரென்று தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது திடீரென்று விரைவு ரெயில் ஒன்று வந்துவிட்டது. உடனே என்ன செய்வதென்று அறியாமல் அந்த நபர் நடைமேடைக்கும், தண்டவாளத்திற்கும் இடையில் உள்ள சிறிய இடத்தில் படுத்துக் கொண்டார். இண்டெர்சிட்டி முழுவதுமாக கடந்து சென்ற போது அந்த நபர் மிகவும் சகஜமாக எழுந்து நின்று அங்கிருந்தவர்களை பார்த்து நன்றி சொல்லிவிட்டு தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.


அதிர்ஷ்டவசமாக அந்த நபருக்கு எந்த காயமும் ஏற்படவில்¬. இதனை அங்கிருந்த பயணிகள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதிலும் ஒருவர் அங்கு நடந்த அத்தனை நிகழ்ச்சிகளையும் தனது செல்போனில் பதிவிட்டு ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் நெஞ்சம் பதறுகிறது. தண்டவாளத்தை கடக்கிறேன் பேர்வழி என்று ஆபத்தை உணராமல் இருக்கும் பொது மக்கள் இந்த வீடியோவை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றும் சிலர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
வேகத்தை விட விவேகம் முக்கியம் என்று சொல்வார்கள். வேகமாக செல்ல வேண்டும் என்று குறுக்கு வழியில் செல்பவர்கள் கடையில் திரும்ப முடியாத இடத்திற்கு செல்வது வேதனைக்குரியது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web