ஓடும் பஸ்சில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்!

 
சதீஷ் போலீ

ஓடும் பேருந்தில், பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய போலீசார் ஒருவரே பள்ளி மாணவிக்கு, பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு தொடர்ந்து பாலியல் தொல்லைகள் கொடுத்திருக்கிறார். இது குறித்து மாணவி கொடுத்த புகாரின் கீழ் அந்த காவலரைப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மதுராந்தகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும், அத்துமீறல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க வேண்டிய போலீசே அது போன்ற குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த முதுகரை பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் (34). இவர் சென்னை மவுண்டில் உள்ள போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து மதுராந்தகம் பேருந்து நிலையத்திற்கு சதீஷ் வந்துள்ளார். முதுகரையில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல பேருந்தில் ஏறினார். அப்போது பேருந்தில் இவரது இருக்கைக்கு முன் இருக்கையில் பள்ளி மாணவர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

சிறை

ஓடும் பஸ்சில் சதீஷ் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ந்து போன மாணவி, வீட்டிற்கு சென்று தனது தாயிடம் நடந்த அனைத்தையும் கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தாய், மேல் மருத்துவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட மகளிர் போலீசார், சதீஷ் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து காவலர் சதீஷ் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சதீஷ் தற்போது சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டு இருக்கிறார். மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே இப்படி ஓடும் பஸ்சில் பள்ளி மாணவியிடம் முறை தவறி நடந்து கொள்ளலாமா என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web