பற்றி எரிந்த தனியார் பேருந்து!! ஜன்னல் வழியே குதித்து உயிர்தப்பிய பயணிகள்.!

 
வந்தவாசி பேருந்து தீ பற்றியது

வந்தவாசி அருகே தனியார் பேருந்து  ஒன்று பாலத்தின் மீது மோதிய விபத்தில், பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பயணிகள் அலறி அடித்து பேருந்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர்.  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வீரம்பாக்கம் அருகே தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

வந்தவாசி பேருந்து தீ பற்றியது

இந்நிலையில்   பேருந்து பாலத்தின் அருகே சென்ற போது ஓட்டுனரின்   கட்டுபாட்டை இழந்து பாலத்தின் மீது மோதியது. இதையடுத்து பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் சாதூரியமாக செயல்பட்டு பேருந்தின் ஜன்னல் வழியே குதித்து தப்பிச் சென்றனர். இதன் காரணமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

வந்தவாசி பேருந்து தீ பற்றியது

இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web