பூட்டிய வீட்டில் அழுகிய சடலம்!! தொடரும் பெற்றோர்களின் பரிதாப முடிவு!!

 
பூட்டிய வீடு


தேனி மாவட்டத்தில் வசித்து வருபவர் 67 வயது  தாமோதரன். இவர்  கோவை சிங்காநல்லூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக அவரைப் பிரிந்து  தனியாக வசித்து வந்தார்.சிங்கநல்லூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 2-ம் தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பினார். அதன் பின்னர் 2 நாட்களாக வீட்டை விட்டுவெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. 

உடல்

இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் தாமோதரன் வீட்டில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்தனர். உடனடியாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தாமோதரன் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். 

போலீஸ்

தாமோதரன் சடலத்தை மீட்ட போலீசார் அதனை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் நலம் காரணமாக தாமோதரன் உயிரிழந்தாரா? தற்கொலையா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web