கோலாலம்பூரில் அதிகாலையில் நிகழ்ந்த கோர சம்பவம்.! நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலி!!

 
நிலச்சரிவு

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் அதிகாலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி   16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிலச்சரிவு

மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் அருகே பதங்கலி என்ற நகரில் தனியார் வேளாண் பண்ணை உள்ளது. இந்த வேளாண் பண்ணை அருகே கூடாம் அமைத்து பலர் தங்கிருந்தனர். இந்நிலையில், இந்த வேளாண் பண்ணையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 79 பேர் சிக்கிக்கொண்டனர்.

நிலச்சரிவு

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 26 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், இந்த நிலச்சரிவில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் புதைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

From around the web