இறந்த மனைவிக்கு வரவேற்பறையில் சிலை! நெகிழும் கணவர்!

 
நிலா

மனைவி உயிருடன் இருக்கும் போதே, இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் ஆண்கள் வசிக்கும் இதே சமூகத்தில் தான், இறந்த மனைவிக்கு வீட்டின் வரவேற்பறையில் சிலை  அமைத்து நெகிழ செய்கிறார் இருசன்.

சேலம் மாவட்டம், கிளாக்காடு பகுதியைச் சேர்ந்தவர் இருசன். இவரது மனைவி நிலா. இவர்களுக்கு திருமணமாகி 24 ஆண்டுகளான நிலையில், கஸ்தூரி, லோகேஸ்வரி, ரேஷ்மா என மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமான நிலையில், மற்ற இரு மகள்களும் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

slm

சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இருசனின் குடும்பத்தில் விதி வேறு விதமாக விளையாடியது. கடந்தாண்டு இருசனின் மனைவி நிலா, ஓர் நாள் தூக்கத்தில் இருந்து எழுந்திருத்து, இரவு வேளையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது, விஷப்பாம்பு கடித்துள்ளது. அதன் பின்னர், உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நிலா உயிரிழந்தார். 

24 வருடங்களாக இருசனுக்கு எல்லாமுமாக இருந்த மனைவி நிலா இறந்தது மனதளவில் இருசனை பெரிதும் பாதித்திருந்தது. நோய் நொடின்னு படுத்ததே கிடையாது. வீட்ல கழிவறை இல்லாததால தானா என் மனைவி செத்து போனான்னு பித்து பிடிச்ச மாதிரி இருந்தேன். குடும்பத்துல வேற யாருக்கும் இந்த நிலை வரக் கூடாதுன்னு அனைத்து வசதிகளுடன் புதிய வீட்டையும் கட்டி முடிச்சேன். ஆனாலும் ஏதோவொரு குறை இருந்துக்கிட்டே தொடர்ந்தது என்கிற இருசன், அடிக்கடி இறந்தவர்களுக்கு மெழுகு சிலை அமைத்து திருமண விழாக்களிலும், கிரஹபிரவேச விழாக்களிலும் உறவினர்கள் கண்ணீர் மல்க உருகுவதைப் பார்த்து, அதே போல தனது மனைவிக்கும் சிலை வைக்க முடிவெடுத்துள்ளார். 

நிலா

இதனையடுத்து, சென்னையில் சிலை தயாரிக்கும் நிறுவனத்திடம் ரூ.1 லட்சம் மதிப்பில் சிலிக்கான் மற்றும் பைபர் மூலம் மனைவி நிலாவின் சிலையை தத்ரூபமாக உருவாக்கினார். தனது மனைவியின் சிலையைப் புது வீட்டின் வரவேற்பறையில் வைத்து இருசனும், அவரது மகள்களும் வழிபட்டு வருகின்றனர். மனைவி நிலாவின்  சேலைகளையும், நகைகளையும் சிலைக்கு அணிவித்து அழகு பார்த்து வருகின்றனர். அந்த பகுதி மக்களும், நிலாவிடம் பழகுவதைப் போலவே, ஞாபகம் வரும் போதெல்லாம் இருசனின் வீட்டிற்குச் சென்று நிலாவின் சிலையைப் பார்த்து, நெகிழ்கிறார்கள். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web